
மழை வருகிற போது
வெயிலை பற்றி நினைக்க தோன்றும்.
இரவு வருகிற போது
பகலை பற்றி நினைக்க தோன்றும்.
பசி வருகிற போது
உணவை பற்றி நினைக்க தோன்றும்.
துன்பம் வருகிற போது
கடவுளை பற்றி நினைக்கத் தோன்றும்.
எதையும் இழந்த பின்னே
அதை பற்றி அதிகம் நினைக்க தோன்றும்.
நான் என்ன செய்ய
சொல்லடி பெண்ணே,
என்னை பற்றி நீயும் நினைக்க..?