வியாழன், 9 டிசம்பர், 2010

சொல்லடி பெண்ணே...

                              


மழை வருகிற போது
       வெயிலை  பற்றி நினைக்க தோன்றும்.

இரவு வருகிற போது
       பகலை பற்றி நினைக்க தோன்றும்.

பசி வருகிற போது
       உணவை பற்றி நினைக்க தோன்றும்.

துன்பம் வருகிற போது
       கடவுளை பற்றி நினைக்கத் தோன்றும்.

எதையும் இழந்த பின்னே
        அதை பற்றி அதிகம் நினைக்க தோன்றும்.

நான் என்ன செய்ய
        சொல்லடி பெண்ணே,
என்னை பற்றி நீயும் நினைக்க..?

சொல்லாமல் கொல்கிறாயடி...

              

உன் எதிரே வந்தால்
     தலை தாழ்த்தி கொள்கிறாய்.

உன்னோடு பேச வந்தால்
                 கேட்காமல் செல்கிறாய்.

கடிதத்தில் எழுதி தந்தால்
                    வாங்க மறுக்கிறாய்.

என் மேல் உனக்கு காதல் இல்லை
         என நினைத்து ஒதுங்கிட நினைத்தால்
நான் போகும் பாதையை
             வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாயே....

பொக்கிஷம்

                          

ரூபாய் நோட்டில் என்  பெயரோடு
    உன் பெயர் சேர்த்தெழுதி கையெழுத்து
                                இட்டு கொடுத்திருந்தாய்.

கொடுத்தது நீ அல்லவா
    பொக்கிஷமாய் தான் பாதுகாத்திருந்தேன்

ஒரு அனாதை குழந்தை
   என்னிடம் பிச்சை கேட்காமலிருந்த
                             முந்தின நிமிடம் வரை....