ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அத்தை மக ரத்தினமே...

            



ஏனடி நீ பெண்ணாய்
பிறந்தாய்..?


சரி பிறந்து விட்டாய்
     ஏனோ என் கண்களில்
            படும் படியே நடந்தாய்.


பாவாடை சட்டை பருவத்தில்
        உன் பால் ஈர்க்காத என் மனதை
உன் தாவணி பருவம்
        ஈர்த்து விட்டது எப்படியடி...?


என்னை பற்றி நினைப்பதை விட
        அதிகம் உன்னை பற்றியே நினைகிறேனடி.


என்னைப் பற்றி  தினம் குறிப்பெடுக்க
                           தான் டைரி வாங்கினேன்.
ஆனால் அதில் உன்னை
       பற்றி தான் குறிப்பெழுதி கொண்டிருக்கிறேன்...


விழித்திருக்கும் போது மட்டுமில்லை
                உறங்கிய பின்பும் கூட கனவுகள்
                         உன்னை பற்றித் தான் வருகிறது.


இந்த நிமிடம் என்ன செய்கிறாய்..?
தெரியவில்லை.
ஆனால் தெரிந்து கொள்ள
                      தவியாய் தவிக்கிறேன்.


படிப்பறிவு இல்லை எனக்கு,
ஆனால் படிக்க கற்று கொள்கிறேன்
                             உன் பெயர் அழுத்தி பார்க்க வேண்டி...


உன்னை மட்டும் ஏன்
                 பிடிக்கிறது எனக்கு..?
அத்தை மகள் என்பதாலா...?

அப்படியென்றால்  எல்லா அத்தை
        மகளையும் அல்லவா பிடிக்க வேண்டும்.
ஆனால் உன்னை மட்டும்
             தானடி அதிகம் பிடிக்கிறது.
உணர்கிறேன் இது தான்
காதல் என்று...


உன்னிடம் காதலை சொல்லி
       விட்டு விடையறிய காத்திருந்த போது
சொன்னால் நம்ப மாட்டாய்.
துடிப்பதை நிறுத்தி விட்டது
என் இதயம்...!


நீயும் என்னை காதலிப்பதாய்
சொன்ன போது தான் மீண்டும்
துடிக்கவே தொடங்கியது என் இதயம்...


உன்னோடு மணிக்கணக்கில்
              பேசியதாய் கடிகாரம் காட்டுகிறது.
அப்படி என்ன தான் பேசினோம்
              காட்டவில்லை என் மனம்...


உன்னோடு பேசும்போது
              மறந்து போகிற விஷயங்கள்
பேசி  முடித்ததும் முட்டி மோதிக்
                 கொண்டு நினைவில் வரும்.


நீ அனுப்பிய நான்கே வரி
         sms - ஐ கூட திரும்ப திரும்ப
                      படித்துகொண்டிருகிறேன்.
உன்னிடம் இருந்து அடுத்த
                   sms - வருகிற வரை...


உன்னோடு தான் பேசினேன்
       என யாரிடமும் சொல்லவில்லை
ஆனாலும் கட்டி கொடுத்து
          விடுகிறது என் முகம்...


யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்
           வைக்க தான் நினைக்கிறது மனம்
ஆனால் தண்டோரா போட்டு
           சொல்லி விடுகிறது உதடுகள்
உன் மீதான காதலை...


நான் பேசாமல் போனால்
             என்ன செய்வாய் என நீ கேட்டாய்..?
என் வேலையைப் பார்ப்பேன்
                 என நான் சொன்னேன்


ஆனால் பின்பு எப்போது நீ பேசுவாய்
என எதிர்பார்த்து காத்திருப்பதே
என் வேலையாகிப் போனது.


உன்னிடம் விளையாட்டாய் தான் சொன்னேன்
எனக்கு கேன்சர் இன்னும் கொஞ்ச
நாளில் நான் இறந்து விடுவேன் என்று...


சட்டென்று அழத்தொடங்கி விட்டாய் நீ.


பொய் தான் சொன்னேன்
என்ற பின்பும் கூட உன் அழுகை
நிற்கவில்லை.
தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாய் நீ.


வருத்தப்பட்டேன்.
உன்னை அழவைத்து விட்டேனே என்று.


சந்தோஷம் கொண்டேன்.
ஒரு வேளை நான் இறந்து போனால்
எப்படி நீ அழுவாய் என இன்றே நான்
 கண்டுவிட்டேன் என்று...


அடிக்கடி உன்னை காண
முடிந்த போது உன் மீது
காதல் இல்லை.


உன் மீது காதல்
வந்த போது
ஒரு முறை கூட
உனை காண முடிவதில்லை..!


வாடிப் போன பின்பு
           எதுவும் மலர்ந்ததில்லை.
உண்மை தான்.
ஆனால் உனை காண்கிற போது
              வாடிய என் முகம் மட்டும் மலர்கிறதே...!


என்னை ஏன் உனக்கு பிடிக்கும்?
என நான் கேட்ட போது,
தெரியவில்லை.ஆனால் பிடிக்கும் என்றாய்.


ஒருவேளை நீ என்னிடம் கேட்டிருந்தாலும்
                 இதையே தான் நானும் சொலிருப்பேன்.


காதலில் காத்திருப்பது சுகம்
என்று சொல்வார்களே
நிச்சயம் அது யாரோ சொன்ன
பொய் என்று தான் நினைக்கிறேன்
உனக்காக காத்திருக்கும் போதெல்லாம்..!


உன்னை பிரிந்து அரபு தேசம்
வேலைக்கு போக வேண்டி உன்னிடம்
பயணம் சொன்ன போது


என்னை மறந்து விட மாட்டாயே
என நீ சொல்லும் போது
கண்ணீரோடு சேர்ந்து
உன் குரல் தழுதழுததே


அப்போது உணர்ந்தேனடி.
உன்னை காட்டிலும் என்னை
தான் நீ அதிகம்  நேசிக்கிறாய் என்பது.


எனை பிடிச்சிருக்கா என அடிக்கடி
நான் கேட்கிற போதெல்லாம்
ஏன்?இன்னுமா சந்தேகம்
என நீ கேட்பாய்.


சந்தேகத்தில் கேட்கவில்லையடி.
ரொம்ப பிடிச்சிருக்கு என சொல்கிற
உன் குரலை அடிக்கடி ரசிக்கத்தான்
அப்படி கேட்கிறேன்.


நம் காதலை யாரிடமும்
சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தோம்.


ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை
உனக்கு தெரிந்தவரிடம் நீயும்
எனக்கு தெரிந்தவரிடம் நானும்...


ஒரு முறை என்னை பற்றி
உன்னிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
எல்லாம் தெரியும் என்றாய்.


என்னைப் பற்றி என்ன தெரியும்..?
எங்கே சொல் என்றேன்.


திருட்டு தம்
என்  முன்னால் காதலி
என்  விருப்ப பாடல்
நான் ரசிக்கும் நடிகை
எனக்கு பிடித்த உணவு


என்று நீ ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல
நானே ஆச்சர்யபட்டு போனேன்.
என்னை பற்றி எல்லாம் தெரிந்து
வைத்திருக்கிறராயே என்று.


பொறமை  கொள்கிறேன் உன் மேல்
            உன் போல் நான் இல்லையே என்று...


போனில் கொடுக்கிற முத்தங்கள்
வந்து சேராது என தெரியும்.
இருந்தாலும் தருவாயா? மாட்டாயா?
என தயக்கத்தோடு ஒரு முத்தம் கேட்டேன்.


தரமாட்டேன் என சிணுங்கினாய்.


என் பல கெஞ்சல்களுக்கு பிறகு
முதலில் நீங்கள் கொடுத்தால்
 தான் என்னவாம் என்றாய்


நீ சொன்ன வார்த்தைகளில் புரிந்து
கொள்ள முடிந்தது உனக்கும் என்னிடம்
இருந்து முத்தம்  பெற வேண்டும் என்ற
உன் உள் மனசு ஆசையை...


நான் கொடுத்தததை விட
   முத்தங்களை   இரட்டிபாய் திரும்ப தந்தாய்.


தகவலை கொண்டு செல்ல
                      தான் தொலைபேசி
நம் முத்தங்களை
         கொண்டு சென்றது இப்போது..!


நீ கொடுத்த முத்தங்களில்
          நான் உறைந்து போனேன்.


என் மீது உனக்கு இவ்வளவு
             ஆசைகளா எனக் கேட்டேன்.
இன்னும் நிறைய ஆசைகள்
                இருப்பதாய் சொன்னாய் நீ


மிச்சத்தை எப்போது காட்டுவாய் என்றேன்


என் மீதான ஆசைகளை
திருமணத்திற்கு பின் காட்டுவதாய்
சொன்னாய்  நீ.


என்று  வருமோ அந்த
நாள் தெரியவில்லை
நிச்சயம் வரும் என காத்திருக்கிறேன்
அந்த இனிய நாளுக்காக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக