
ஒவ்வொரு முறையும் எனை நீ
காயப்படுத்துகிற போதும்
உன்னைப் பற்றி திட்டி
எழுத தான் பேனா தொடுவேன்.
எழுதி முடித்த பின்
தான் நானே அறிவேன்.
உன்னை திட்டி எழுதாமல்
உன்னை பற்றி அழகான
கவிதை எழுதி இருக்கிறேன் என்று.
முடிகிறது.
உன்னால் சட்டென்று
என்னை காயப்படுத்த
முடியவில்லை.
என்னால் உன்னை எழுத்தில்
கூட காயப்படுத்த....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக