
உன் பெயர் கவிதை
உன் விழிகள் காந்தம்
உன் இதழ்கள் சுவை
உன் மேனி தங்கம்
உன் வெட்கம் செவ்வானம்
உன் அன்பு தென்றல்
உன் கோபம் பூகம்பம்
அத்தனையும் காதலிக்கையில்
உன்னிடம் நான் சொன்னது.
அதே வார்த்தைகள்
அதே வரிகள்
கொஞ்சம் கூட மாறாமல்
என் மனைவியிடமும் சொல்கிறேன்.
என்ன செய்ய..?
வலிக்கத்தான் செய்கிறது
மனதுக்குள் ஒரு ஓரமாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக