வியாழன், 14 அக்டோபர், 2010

நீயே சொல்...

              

                      உன்னை கண்டேனே அது தவறா..?

                    முதல் பார்வையிலேயே உள்ளுக்குள்
                     பிடித்து போனதே
                     அது தவறா..?
 

                     இரவு பகல் எந்நேரமும்
                     உன் நினைவாகவே இருந்தேனே
                     அது தவறா..?


                     பல முறை நீ நிராகரித்தும்
                     என்றாவது என் மேல் உனக்கு
                     காதல் வராதா என நினைத்து
                     காத்திருந்தேனே
                     அது தவறா..?


                     யோசித்து பார்த்தேன்
                     எல்லாமே சரி தான் பெண்ணே
                     இதயமே இல்லாத உன்னை
                     காதலித்ததை தவிர...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக